கஜகஸ்தான் நாட்டில் உரை பனி காலம் நிலவுவதால் அங்கு பார்க்கின்ற இடங்கள் அனைத்தும் வெண்ணநிறத்தில் காட்சி அளிப்பது காண்போரது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.
திடீரென உருவான பனி எரிமலையை அந்த நாட்டு மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

கஜகஸ்தானில் அலமாட்டி எனும் இடத்தில் சுமார் 45 அடி உயரத்திற்கு புதிதாக பனி எரிமலை ஒன்று லாவாவுக்கு பதிலாக புகை போன்று பனியை வெளியிட்டு வருகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் , "குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் வெளியேறிய நீர் காலநிலை மாற்றம் காரணமாக நீர் உறைந்து பனியாக மாறியதும், வெளியேறும் நீரும் புகைபோன்று மாறியுள்ளது." என கூறப்பட்டுள்ளது.