
ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது இதனை எதிர்த்த நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்துறை செயலர் சார்பாக சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பெரோஸ் கான் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஊர்க்காவல் படை என்பது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஓர் தன்னார்வ அமைப்பு. காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை. இதில் ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது.