
Covid-19 க்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக அளவில் கிட்டதட்ட 30 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அதற்குள் தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்று டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார் .
இதனால் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் அப்போது கூறியதாவது:-
“இனி வரும் ஒவ்வொரு மாதத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும் . தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு கிடைத்து விடும். மேலும் நாம் குறுகிய காலத்திலேயே Covid -19 ஆன தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி அக்டோபர் மாதத்தில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.